Blue Army

Blue Army
Click this image to see the Winning Moments of ICC World Cup 2011 Finals
Showing posts with label Tamil Songs Lyrics in Tamil Fonttt. Show all posts
Showing posts with label Tamil Songs Lyrics in Tamil Fonttt. Show all posts

Saturday, July 9, 2011

lyrics in tamil-அம்மன் கோவில் கிழக்காலே சூப்பர் ஹிட் பாடல் உன் பார்வையில் ஓராயிரம்

உன் பார்வையில் ஓராயிரம்
கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே
நிதமும் உன்னை நினைக்கிறேன்
நினைவினாலே அணைக்கிறேன்
(உன் பார்வையில்)

அசைந்து இசைத்தது வளைக்கரம்தான்
இசைந்து இசைத்தது புது சுரம்தான்
சிரித்த சிரிப்பொலி சிலம்பொலிதான்
கழுத்தில் இருப்பது வலம்புரிதான்
இருக்கும் வரைக்கும் எடுத்துக்கொடுக்கும் (2)
மனதை மயிலிடம் இழந்தேனே
மயங்கி தினம் தினம் விழுந்தேனே
மறந்து பிறந்து பறந்து தினம் மகிழ
(உன் பார்வையில்)

அணைத்து நனைந்தது தலையணைதான்
அடுத்த அடியென்ன எடுப்பது நான்
படுக்கை விரித்தது உனக்கெனத்தான்
இடுப்பை வளைத்தெனை அணைத்திடத்தான்
நினைக்க மறந்தாய் தனித்துப் பறந்தேன் (2)
மறைத்த முகத்திரை திறப்பாயோ
திறந்து அகத்திடை இருப்பாயோ
இருந்து விருந்து இரண்டு மனம் இணைய
(உன் பார்வையில்)

Tuesday, June 28, 2011

Thooliyilae Aadavantha Song Lyrics in Tamil Font

தூளியிலே ஆடவந்த வானத்து மின்விளக்கே
ஆழியில் கண்டெடுத்த அற்புத ஆணிமுத்தே
தொட்டில் மேலே முத்து மாலை
சின்னப் பூவா விளையாட சின்னத் தம்பி எசபாட

(தூளியிலே )

பாட்டெடுத்து நான் படிச்சா காட்டருவி கண்ணுறங்கும்
பட்டமரம் பூமலரும் பாறையிலும் நீர்சுரக்கும்
ராகமென்ன தாளமென்ன அறிஞ்சா நான் படிச்சேன்
ஏழு கட்ட எட்டுக் கட்ட தெரிஞ்சா நான் படிச்சேன்
நான் படிச்ச ஞானமெல்லாம் யார் கொடுத்தா சாமிதான்
ஏடெடுத்துப் படிக்கவில்ல சாட்சியிந்த பூமி தான்
தொட்டில் மேலே முத்து மாலை
சின்னப் பூவா விளையாட சின்னத் தம்பி எசபாட

(தூளியிலே )

சொருபோடத் தாயிருக்க பட்டினியப் பார்த்ததில்ல
தாயிருக்கும் காரணத்தால் கோயிலுக்குப் போனதில்ல
தாயடிச்சு வலிச்சதில்ல இருந்தும் நானழுதேன்
நானழுதா தாங்கிடுமா ஒடனே தாயழுவா
ஆகமொத்தம் தாய் மனசு போல் நடக்கும் பிள்ள நான்
வாழுகிற வாழ்க்கையிலே தோல்விகளே இல்லைதான்
தொட்டில் மேலே முத்து மாலை
சின்னப் பூவா விளையாட சின்னத் தம்பி எசபாட

Povoma Oorgolam Song Lyrics in Tamil Font

போவோமா ஊர்கோலம் (சின்ன தம்பி)
குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம், சுவர்ணலதா
வரிகள்:

போவோமா ஊர்கோலம் பூலோகம் எங்கெங்கும்

அரண்மன அன்னக்கிளி தரையில நடப்பது அடுக்குமா பொறுக்குமா
பனியிலும் வெட்டவெளி வெய்யிலிலும் உள்ளசுகம் அரண்மன கொடுக்குமா
குளுகுளுகுளு அருவியில் கொஞ்சிக் கொஞ்சி நடப்பது குடிசைய விரும்புமா
சிலுசிலுசிலுவென இங்கிருக்கும் காத்து அங்க அடிக்குமா கெடக்குமா
பளிங்கு போல உன்வீடு வழியில பள்ளம் மேடு
வரப்பு மேடும் வயற்காட்டும் பறந்து போவேன் பாரு
அதிசயமான பெண்தானே
புதுசுகம் தேடி வந்தேனே

(போவோமா)

எட்டுவித அருவியும் மெட்டுக்கட்டும் குருவியும் அடடடா அதிச்யம்
கற்பனையில் மெதக்குது கண்டதையும் ரசிக்குது இதிலென்ன ஒரு சுகம்
முத்துமணி தெறிக்குது ரத்தினங்கள் ஜொலிக்குது நடந்திடும் நடையிலே
உச்சந்தல சொழலுது உள்ளிக்குள்ளல மயங்குது எனக்கொண்ணும் புரியல்லே
கவிதை பாடும் காவேரி ஜதிய சேத்து ஆடும்
அணைகள் நூறு போட்டாலும் அடங்கிடாம ஓடும்
போதும் போதும் ஒம் பாட்டு
பொறப்படப் போரேன் நிப்பாட்டு

ChinnaThambi Super Melody Song

அரச்ச சந்தனம் மணக்கும் குங்குமம் அழகு நெத்தியிலே - ஒரு
அழகுப் பெட்டகம் புதிய புத்தகம் சிரிக்கும் பந்தலிலே
முழுச் சந்திரன் வந்ததுபோல் ஒரு சுந்தரி வந்ததென்ன - ஒரு
மந்திரம் செஞ்சதப்போல் பல மாயங்கள் செஞ்சதென்ன
இது பூவோ பூந்தேனோ


பூவடி அவ பொன்னடி அதத் தேடிப் போகும் தேனி
தேனடி அந்தத் திருவடி அவ தேவலோக ராளி
தாழம்பூவு வாசம் வீசும் மேனியோ
அந்த ஏழு லோகம் பார்த்திராத தேவியோ
ரத்தினம் கட்டின பூந்தேரு ஒங்களப் படச்சதாரு
என்னிக்கும் வயசு மூவாறு என் சொல்லு பலிக்கும் பாரு
இது பூவோ பூந்தேனோ



மான்விழி அவ தேன்மொழி நல்ல மகிழம்பூவு அதரம்
பூ நெறம் அவ பொன்னெறம் அவ சிரிக்க நெனப்பு செதறும்
சேலப் பூவு ஜாலம்போடும் ராசிதான்
அவ ஏலத்தோடு ஜாலம்போடும் ராசிதான்
மொட்டுக்கள் இன்னிக்குப் பூவாச்சு சித்திரம் பெண்ணென ஆச்சு
கட்டுறேன் கட்டுறேன் நான் பாட்டு கைகளத் தட்டுங்க கேட்டு
இது பூவோ பூந்தேனோ

Ennavendru solvathamma song lyrics in tamil font

என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை
சொல்ல மொழி இல்லையம்மா கொஞ்சி வரும் பேரழகை
அந்தி மஞ்சள் நிறத்தவளை என் நெஞ்சில் நிறைத்தவளை
நான் என்னென்று சொல்வேனோ அதை எப்படி சொல்வேனோ
அவள் வான் மேகம் காணாத பால் நிலா
இந்த பூலோகம் காணாத தென் நிலா'

என்னவென்று .....

தெம்மாங்கு பாடிடும் சின்ன விழி மீன்களும்
பொன் ஊஞ்சல் ஆடிடும் கன்னி கருங் கூந்தலும்
முத்தாடும் மேடை பார்த்து வாடி போகும் வான் பிறை
முத்தாரம் நீட்டும் மார்பில் ஏக்கம் தீர்க்கும் தாமரை
வண்ண பூவின் வாசம் வந்து நேசம் பேசும்
அவள் நான் பார்க்க தாளாமல் நாணுவா
புது பூ கோலம் தான் காலில் போடுவா


என்னவென்று......

கண்ணோரம் ஆயிரம் காதல் கதை பேசுவாள்
முந்தானை சோலையில் தென்றலுடன் பேசுவாள்
ஆகாய மேகம் ஆகி ஆசை தூறல் போடுவாள்
நீரோடை போல நாளும் ஆடி பாடி போடுவாள்
அதிகாலை மூச்சு அசைந்தாடும் நாற்று
உயிர் மூச்சாகி ரீங்காரம் பாடுவாள்
இந்த ராஜாவின் தோளோடு சேருவாள்